“மாஸ்டர்கார்ட்“ நிறுவனம் ”எல்சிடி” திரை கொண்ட புது வகையான அட்டையை அறிமுகப்படுத்தியது!
தற்போதய காலகட்டத்தில் க்ரெடிட் கார்டு பெருமளவில் புழக்கத்தில் உள்ளது. திருடப்படும் க்ரெடிட் கார்டுகளால் ஏற்படும் இழப்புகள் ஏராளம். இதைத் தடுக்க MasterCard நிறுவனம் LCD திரை கொண்ட புது வகையான அட்டைகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் ஒரு முறை செயல்படும் கடவுச் சொல்லை (OTP) உருவாக்க இது பெரிதும் பயன்படும். இது மட்டுமல்லாது Credit Score, Loyalty Points போன்ற விவரங்களையும் எளிதாகக் காண முடியும்.
மிக முக்கியமான பணப் பரிவர்த்னைகளுக்கென OTP உருவாக்க ஒரு சிறிய கணிப்பான் (Calculator) போன்ற பொருளை தூக்கிச் செல்ல வேண்டும்.. இந்த செயல்த்திறனை அட்டையில் உட்புகுத்தியுள்ளது MasterCard நிறுவனம்.
இந்த வசதி உலகிலேயே முதன் முதலில் Standard Chartered வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். பின்னர் ஏனைய மற்றைய வங்கி வாடிக்கையாளருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.











0 comments:
Post a Comment