கையில் அடக்கமாக எடுத்து செல்லகூடிய தண்ணீரை வடிகட்டும் கருவி!
பொதுவாக நாம் உயிர் வாழ்வதற்கு மிக அத்தியாவசியமானது நீர்.சில நேரங்களில் நாம் பாதகாப்பான நீரைப் பெறடியாத இடங்களில் இருக்கும் போது அங்குள்ள நீரில் பாக்டீரியாக்களும் மற்றும் நோய் உண்டாக்க கூடிய அபாயகரமான விஷ கிருமிகளும் இருக்கக்கூடும்.
இதற்காக நீரை வடிகட்டி அருந்தும் பழக்கம் தற்கால மக்களிடையே விரைவாகப் பரவி வருவதுடன் இதற்கென பல்வேறு கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த கருவிகள் எல்லாம் ஒரு நிலையான இடத்தில் வைத்துதான் உபயோகபடுத்ப்பட்டு வருகிறது.இதனை எளிமைபடுத்தும் வகையில் தான் இப்பொழுது NDūR Survival Straw எனும் நவீன கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கருவியானது ஏனைய வடிகட்டும் கருவிகளைப் போன்று அல்லாமல் நீரை அருந்தும் வேளையில் உடனுக்குடன் வடிகட்டி தூய நீரை வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த கருவியானது 99சதவீதம் நோய்விளைவிக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கிறது இதன் விலையானது 30 அமெரிக்க டாலர்களாக காணப்படுகின்றது











0 comments:
Post a Comment