கடவுளின் குளியல் தொட்டி கண்டுபிடிப்பு

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள ஏரி­யொன்றின் நீர் கடந்த 7,500 வரு­டங்­க­ளாக  கால­நிலை மாற்­றத்­தாலோ வேறு தாக்­கங்­க­ளாலோ மாற்­ற­ம­டை­யாத நிலையில் உள்­ள­தாக விஞ்­ஞா­னிகள் ஆய்­வு­களின் மூலம் அண்­மையில் கண்­ட­றிந்­துள்­ளனர். 

இந்த ஏரி­யி­லுள்ள பளிங்கு போல் தெளி­வாக உள்­ள­துடன் மிகத் தூய்­மை­யா­ன­தா­கவும் உள்­ளது. இந்த ஏரியை கட­வுளின் குளி­யல்­தொட்டி என மேற்­படி ஆய்வை மேற்­கொண்ட அடிலெய்ட் பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞா­னிகள் வர்­ணித்­துள்­ளனர்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிரிஸ்பேன் நக­ருக்கு 50 கிலோ­மீற்றர் தொலைவில் இந்த ஏரி உள்­ளது. இந்த ஏரியின் நீர் சுமார் 35 நாட்­க­ளுக்கு ஒரு தடவை அரு­கி­லுள்ள பள்­ளத்­தாக்­கிற்கு வடிந்து சென்று ஊற்­றுக்­களால் மீண்டும் நிரப்­பப்­ப­டு­வ­தா­கவும் இத்­த­கைய ஏரிகள் மிக அபூர்வமா­னவை எனவும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கோடை ­கா­லத்தில் நீல நிற­மாக இந்த ஏரி காட்­சி­ய­ளிக்­கி­றது. மாரி காலத்தில் சாம்பல் நிற­மாகத் தென்­ப­டு­கி­றது. இந்த ஏரியின் நீர் மிகத் தெளி­வாக உள்ளதால் 10 மீற்றர் ஆழம்வரை தெளிவாக பார்க்கக்கூடியதாக உள்ளது என கலாநிதி கமெரோன் பர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment