கண்கள் பாதிப்பும், அவற்றுக்கான தீர்வுகளும்
கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். கண்கள் காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் வெவ்வேறு விம்பங்களின் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை காண உதவுகின்றன. இந்த வகையில் மனிதனின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அவற்றுக்கான தீர்வுகளையும் பற்றி விளக்குகிறார் கண் வைத்திய நிபுணர் வாசுகி குரு சாமி.
சிறுவயதிலேயே கண் பார்வை குறைவடைந்து போவதற்கான காரணம் என்ன?
தாய் வயிற்றில் சிசு இருக்கையில் ஏதாவது நோய் வந்தால் அது சிசுவின் கண்ணை பாதிக்க வாய்ப்புள்ளது. அதில் (TORCH) என சொல்லப்படும் நோய்கள் சின்னம்மை, ருபெல்லா போன்றவை தாய் கருதரித்து மூன்று மாதங்களுக்குள் நோய் தொற்று ஏற்பட்டால் பிள்ளையின் கண் பாதிக்க வாய்ப்புள்ளது. தாயும் தந்தையும் நெருங்கிய உறவில் திருமணம் செய்திருந்தால் குழந்தைகளுக்கு கண்பார்வை பிறப்பிலேயே குறைய வாய்ப்புள்ளது.
பெற்றோர் சிறுவயதில் கண்ணாடி பாவித்தவர்களாக இருந்தால் குழந்தை களும் பாவிக்கவேண்டியுள்ளது. சில வேளையில் தாய் கர்ப்பம் தரித்திருக்கையில், முதல் மூன்று மாதங்களில் அதிக மது அருந்துதல் (அல்கக்கோல்) புகைபிடித்தல் மூலம் குழந்தையின் கண் பார்வை இழக்க நேரிடலாம். விற்றமின் குறைபாட்டினாலும் கண்ணின் வளர்ச்சி பாதிப்படைய வாய்ப்புள்ளது. அத்தோடு குழந்தை தாய் வயிற்றிலிருந்து வெளியேறும் போது பிறப்பு உறுப்புக்களில் கிருமி தொற்று காரணமாக தாக்குதலாலும் குழந்தை பிறந்த பிறகு கண்கள் சிவந்து பார்வை இழக்க வாய்ப்புண்டு.
பிள்ளைகளின் பழக்க வழக்கம், பிள்ளைகள் தொடர்ச்சியாக கிட்ட பார்வைக்கு இசைவாக்கப்படுதல் பாதிப்பு நேரிடலாம். மயோ பியா என்ற பார்வை குறைபாடு வரவாய்ப்புள்ளது. வாக்கு கண் என்பது ஒரு கண்ணின் பார்வையை குறைக்கும். வாக்கு கண் உள்ளவர்களை செல்லவாக்கு என்று எண்ணாது வைத்தியரை நாடவேண்டும். ஏனென்றால் சிறுவர்களிடையே தலை சரிந்துப் பார்ப்பது போன்ற குறைபாடுகள் இருக்கலாம். இந்த கண்ணுள்ளவர்களுக்கு கட்டாயமாக கண்பாதிக்க வாய்ப்புள்ளது.
கண்களில் வெள்ளை படர்வதற்கான காரணம் என்ன?
பிரதான காரணம் வயது போகப் போக கண்களில் உள்ள லென்ஸிலுள்ள செல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்கிறது. செல்ஸ் தள்ளுபட்டு கொண்டிருக்கையில், பின்பக்கம் நார்களாக வளர்ந்து கண்களில் படர்கிறது. அல்ட்டா வைலட் கதிர்கள் கண்களில் பட கண்களில் நிறமாற வாய்ப்புள்ளது. steroid மருந்து வகைகளை பாவிப்பதனாலும் கெட் ரெக் வரவாய்ப்புள்ளது.
மின்னல் தாக்குதல் சடுதியாக குளுக்கோமா காரணமாகவும் தாய்மார் வயிற்றில் குழந்தைகள் இருக்கும் போது ஏதாவது தொற்றுநோய் காரணமாக கெட் ரெக் வர வாய்ப்புள்ளது. அதிகமாக 55 மேற்பட்ட வயதினருக்கே உடல் அமைப்புக்கு ஏற்றவகையில் ஏற்படலாம். சிறுவயதிலே steroid மருந்துகளை பாவிக்கும் போதும், சிறுநீரக நோய்க்கான மருந்துகளை பாவிக்கும் போது கெட் ரெக் வரவாய்ப்புள்ளது. கெமிக்கல் கண்களுக்கு படுவதால் கெட் ரெக் சிறுவயதிலே வரவாய்ப்புள்ளது. பிறக்கும் சிறு குழந்தைகளுக்கும் கெட் ரெக் வரலாம்.
கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றுவதற்கும் கண்ணுக்கும் தொடர்பு உண்டா?
கண் பகுதியை சுற்றி உள்ள தோல் பகுதி மிகவும் மென்மையானது. உடலில் உள்ள ஏனைய பகுதிகளை போல தடிப்பானது இல்லை. இது மிகவும் மென்மைதன்மை ஒளி உட்செல்லவிடும் தன்மை கொண்டது.
உடலிலுள்ள இரத்தோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக சொன்னால், கண்களில் ஏற்படும் கருவளையமானது தெரிவது இது பரம்பரையாகும். ஒவ்வொருவரின் எலும்பின் அமைப்பை பொறுத்து அதாவது கற்குழியைப் பொறுத்து அதன் தோற்றமைப்பு மாறுபடும். கண்ணில் அழற்சி மற்றது கண்கடி ஏற்படுதல், கண்கள் வறட்சி அடைதல், கண்களில் அழற்சி ஏற்படுவதால் அடிக்கடி கண்களை கசக்குவதால் இதன் காரணமாக கண்களில் தடிப்பு ஏற்பட்டு கண்களில் கருவளையம் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்ணுக்கு கண்ணாடி தேவையேற்படும் போது கண்ணாடி பாவிக்காமை, தூக்கமின்மை, உடம்பில் இரத்த ஓட்டம் குறைவடைதல், உடம்பில் நீர்த்தன்மை குறைவடைதல், மருந்துகள் (குளுக்கோமா), தொடர்ந்து கணினி முன் நின்று வேலை செய்தல், நித்திரை குறைவடைதல் போன்ற காரணங்களினால் கண்களில் கருவளையம் தோன்ற காரணமாக அமையலாம்.
கண் மஞ்சள் நிறமாகத் தோன்றுவதற்கான காரணம் என்ன?
மஞ்சள் காமாலை, செங்கன்மாரி இருப்பதை அறிந்து கொள்ளலாம். அத்தோடு நோயுள்ளவர் கழிக்கும் சிறுநீர் மஞ்சள் நிறமாக இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும். பொதுவாக கண்களில் வெள்ளை நிறமான மையப் பகுதியில் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு காரணம் சூரிய ஒளியின் அல்டா வைலட் காரணமாக மஞ்சள் நிறமாக வரவாய்ப்புள்ளது. கண்களின் வெள்ளைப்பகுதியில் கரு திட்டுகள் இருப்பதால் மஞ்சள் நிற தோற்றமளிக்கிறது. எல்லா இடங்களிலும் சுத்தமான மஞ்சளாக இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும். அல்டா வைலட் பாதிப்பாக இருந்தால் பொதுவாக சன்கிளாஸ், தொப்பி, குடை பாவித்தல் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.
கண் சிவப்பதற்கான காரணம் என்ன?
கண் சிவப்பாக மாற பல காரணங்கள் உண்டு. ஆனால் அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கண் சிவப்பாக இருந்து கண்ணில் வேதனை இருக்குமா என்பதை கவனிக்கவேண்டும். அதோடு பார்வை குறைபாடு உண்டா என்பதை முக்கியமாக கவனிக்கவேண்டும். கண் சிவப்பாக இருப்பது என்பது அசாதரண நிலையாகும். ஒரு கண் சிவந்து இருந்தால் கட்டாயம் வைத்தியரை நாடவேண்டும்.
இரண்டு கண்களும் சிவந்து இருந்தால் அது அவ்வளவுக்கு பாரதூரமானது என்று சொல்லமுடியாது. ஒரு கண்ணில் ஒரு பக்கத்தில் சிவந்து காணப்பட்டு கடும் வலி, பார்வை குறைபாடு காணப்பட்டால் வைத்தியரை உடனடியாக நாடவேண்டும்.
இப்படியான சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு மணித்தியாலமும் அதன் பாதிப்பு அதிகரித்து செல்வதால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும். இப்படிபட்ட வேதனை இருக்குமானால் இக் குளுமியாவாக இருக்கலாம். சாதாரணமாக கண் சிவப்பது தொற்றுநோய் அல்லது நோயாகவும் இருக்கலாம். இது கடுமையான வேதனை வந்தால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும். புரை தள்ளி தண்ணீர் வந்தது என்றால், அது கண்நோயாகத் தான் இருக்கும். அதைவிடவும் கண்ணில் இரத்த கசிவு காரணமாகவும் கண் சிவக்கலாம் அல்லது அது சடுதியாக அல்டா வைலட் கதிர்வீச்சு கண்ணில் படுவதால் கண்களின் இரு பக்கமும் நடுவில் கோடுகளாக தெரியும்.
மாலைக்கண் நோய்க்கான காரணம் என்ன?
இரவு பார்வை குறைவாக இருப்பது மாலைக்கண் நோய் இதை plterygium என்று சொல்லாம். குளுக்கோமாவுக்கு போடும் மருந்துகளால் சில சமயம் இரவு பார்வை பாதிக்கலாம். இரவு பார்வைக்கு பொதுவான காரணம் ரெகி நை பிக்மன்ட் டோசா. விழித்திரையில் பிறப்பால் அல்லது பரம்பரையால் கண்ணில் சில மாறுபாடுகள் வருவதால் இது பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு வரவாய்ப்புள்ளது இது பரம்பரை நோயாக அமையும். இந்நோய் வரும்போது காது கேட்காமல் போகவும் வாய்ப் புள்ளது.
50-–55 வயதினருக்கு வெள்ளை படிவதால் இரவு பார்வையை பாதிக்கிறது. இரவு நேரங்களில் வாகனங்கள் செலுத்தும் போது கெட் ரெக் இரவு கண்பார்வை பாதிப்படைய செய்கிறது.
மயோபியா திருத்தப்படாமல் இருக்கையில், தூர பார்வை தெரியாமல் இருக்கலாம். இதனால் இரவில் பார்வை குறைவாக இருக்கலாம். குளுக்கோமாவுக்கு போடப்படும் மருந்துகள் கண்ணின் கருமணியை பாதிக்கலாம்.
லென்ஸ் போடுவதால் கண்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா-?
லென்ஸ் பல வகையானது. இதில் முக்கியமானது இரண்டு. கென்டேக் லென்ஸ் Intra ocular lens கென்டேக் லென்ஸ் என்பது கண் கருமணியில் கண்ணுக்கு மேலே போட்டு கழற்றுவது.
கெட் ரெக் அறுவைச் சிகிச்சை செய்த பின் Intra ocular lens கண்ணுக்குள் நிரந்தரமாக போடப்படுகின்றது. கெட் ரெக் அறுவைச் சிகிச்சை செய்த பின் தடித்த கிளாசை முன்பு போட்டார்கள் ஆனால் இப்போது Intra ocular lens கண்ணுக்குள் போடுகிறார்கள். கண்களை அறுவைச் சிகிச்சை செய்த பின் கண்களுக்குள்ளே லென்ஸ்களை மடித்து போடப்படுகின்றன. இன்றைய காலத்தின் தேவையை பொறுத்து அமைகிறது. நாம் போடும் லென்ஸின் தரத்தை பொறுத்து சிறு சிறு பிரச்சினைகள் வரலாம்.
ஒருபிரச்சினையும் இல்லாதவர்களுக்கு அறுவைச் கிச்சை செய்தால் மறுநாளே சரியாகிவிடும். ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் நாட்கள் தள்ளி போக வாய்ப்புள்ளது. சாதாரண நிலைக்கு வர ஒரு மாதகாலம் தேவைப்படும். கெட் ரெக் லென்ஸ் என்பது கண்மணிக்கு மேலே போடுவது. கண் கருமணிக்கு கடத்தப்படுகின்ற ஒக்சிசன் பாதிக்க வாய்ப்புள்ளது. இது குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்கு மாத்திரம் பாவிக்க வேண்டும். உதாரணமாக ஒரு லென்ஸ் எட்டு மணித்தியாலம் மாத்திரம் பாவிக்கவேண்டும் என்ற காலவரைக்குட்படுத்தப்பட்டிருந்தால் அதை கருத்தில்கொள்ளாது. சோம்பல் காரணமாக லென்ஸைக் நீக்காமல் நித்திரை செய்தால் கண்களுக்கு பாதிப்பு வரவாய்ப்புள்ளது. அதற்கு சுத்தம் செய்வதற்கான திரவங்கள் உள்ளது. அந்த திரவியத்தை கவனமாக பாவிக்கவேண்டும். அதை கவனக் குறைவாக பாவித்தால் கண்களில் தொற்று நோய் வரவாய்ப்புள்ளது. அதை தவிரவும், கண்களில் பொருத்தப்பட்ட லென்ஸ் நாளாக நாளாக ஒரு மாதத்தில் அல்லது மூன்று மாத்திற்கு பாவிக்கலாம். இது நாட்பட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் போடும் லென்ஸுக்கு திரவங்கள் போடுவதால் கண்களில் அழற்சி வர காரணமாக அமைகின்றது, ஒரு சிலருக்கு லென்ஸ் போடுவதால் நல்ல பார்வை வரும் என்பதை அறிந்த பின் அந்த நோயாளிக்கு Intra ocular lendலென்ஸ் பாவிப்பது நல்லது.
லென்ஸுக்கு பின்னால் ஒரு படல் மாதிரி படர வாய்புள்ளது. இதை ஒரு லெசரால் குணப்படுத்த முடியும். இளமையாக உள்ளவர்களுக்கு அடிக்கடி லெசரால் குணப்படுத்த வேண்டும். வயது போனவர்களுக்கு குறைவாக படர வாய்ப்புள்ளது.











0 comments:
Post a Comment