சகலதுறை கிரிக்கெட் வீரர்களில் ஏஞ்சலோ மெத்யூஸ் முதலிடம்

இந்­தி­யா­வுக்கு எதி­ரான ஐந்து போட்­டிகள் கொண்ட தொடரில் சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்த ஏஞ்­சலோ மெத்யூஸ், சர்­வ­தேச ஒரு நாள் கிரிக்கெட் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ருக்­கான நிரல்­ப­டுத்­தலில் முத­லி­டத்தை அடைந்­துள்ளார்.

இந்தத் தொடரில் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் அடங்­க­லாக 339 ஓட்­டங்­களைப் பெற்ற மெத்யூஸ், 4 விக்கெட்­களைக் கைப்­பற்­றி­யி­ருந்தார்.
இதனையடுத்து சக­ல­துறை ஆட்­டக்­கா­ரர்­க­ளுக்­கான நிரல்­ப­டுத்­தலில் ஏஞ்­சலோ மெத்யூஸ் முதலாம் இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ளார்.

நிரல்­ப­டுத்­த­லுக்­கான 420 படி­நிலை புள்­ளி­களை மெத்யூஸ் பெற்­றுள்­ள­துடன் பாகிஸ்­தானின் மொஹமத் ஹஃவீஸ் 411 படி­நிலை புள்­ளி­க­ளுடன் இரண்டாம் இடத்­தி லும் பங்­க­ளா­தேஷின் ஷக்கில் அல் ஹசன் 361 படி­நிலை புள்­ளி­க­ளுடன் மூன்றாம் இடத்­திலும் உள்­ளனர்.

இதே­வேளை சக­ல­ துறை வீரர்­க­ளுக்­கான நிரல்­ப­டுத்­தலில் முதல் ஐந்து இடங்­க­ளிலும் ஆசிய நாட்­ட­வர்கள் இருக்­கின்­றமை சிறப்­பம்­ச­மாகும். நான்காம் இடத்தில் ரவீந்த்ர ஜடேஜாவும் ஐந்தாம் இடத்தில் திலகரட்ண டில்ஷானும் உள்ளனர்

0 comments:

Post a Comment