ஐ.நா. தூதுவரானார் லியனார்டோ
ட்டானிக்" திரைப்பட புகழ் ஹொலிவூட் நடிகர் லியனார்டோ டிகெப்ரியோ, ஐ.நாவின் காலநிலைக்கான அமைதித் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் டிகெப்ரியோ இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள காலநிலை தொடர்பான ஐ.நாவின் உச்சிமாநாட்டில் லியனார்டோ டி கெப்ரியோ உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"லியனார்டோ உலகின் முன்னிலை நடிகர்களில் ஒருவர் மாத்திரமல்ல. அவர் சுற்றாடல் விவகாரங்களில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்" என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
1998 ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்புக்கான லியனார்டோ டிகெப்ரியோ மன்றம் எனும் அமைப்பை லியனார்டோ ஸ்தாபித்தமை குறிப்பிடத்தக்கது. நேபாளத்திலுள்ள புலிகள், காட்டுயானைகள், கடல்வாழ் உயிரினங்கள் முதலானவற்றை பாதுகாப்பதற்கு லியனார்டோவின் மன்றம் நிதியுதவி வழங்குகிறது.











0 comments:
Post a Comment